கொலையாளிகளை அடையாளம் காட்டினார் பத்மா!
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடையாளும் காணும் வகையில் அடையாள அணிவகுப்புசென்னை மத்திய சிறையில் நடத்தப்பட்டுள்ளது.
சங்கரராமனின் மனைவி பத்மா, மகள் உமா, கோவில் ஊழியர்கள் இரண்டு பேர் ஆகியோர் கொலையாளிகளை அடையாளம்காட்டினர்.
சங்கரராமனைக் கொன்ற கூலிப் படையில் 6 பேர் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் முதலில் காஞ்சிபுரத்தில் உள்ள சங்கரராமன்வீட்டுக்குத் தான் சென்றனர். அங்கு போய் சங்கரராமன் எங்கே என்று கேட்க, அவர் கோவிலில் இருக்கிறார் என்று தாய் பத்மா,மகள் உமா ஆகியோர் பதிலளித்துள்ளனர்.
இதையடுத்தே அக் கும்பல் அங்கு சென்று சங்கரராமனைத் தீர்த்துக் கட்டியது. இதனால் கொலையாளிகளை நேரில் பார்த்தபத்மா, உமா, மேலும் கணேஷ் உள்ளிட்ட இரு கோவில் ஊழியர்கள் இருவரையும் வைத்து கொலையாளிகளின் அடையாளஅணிவகுப்பை போலீசார் இன்று நடத்தினர்.
இந்தக் கொலை வழக்கில் கைதான 19 பேரும் சென்னை மத்திய சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் மேலும்70 கைதிகளையும் கலந்து மத்திய சிறையிலேயே அடையாள அணிவகுப்பை போலீசார் நடத்தினர்.
திருக்கழுக்குன்றம் மாஜிஸ்திரேட் மகாலட்சுமி முன்னிலையில் இந்த அடையாள அணிவகுப்பு நடந்தது.
கூலிப் படையினரையும் சேர்த்து மொத்தம் 90 கைதிகள் வரிசையாக நிறுத்தப்பட்டனர். முதலில் கைதிகளை வரிசையாக நிறுத்திஅவர்கள் சட்டையில் நம்பர் போட்டு அடையாளம் காட்டும்படி சொல்லப்பட்டது. பின்பு கைதிகள் சட்டை இல்லாமல் வேறுஇடத்தில் மாற்றி நிற்க வைத்து அடையாளம் காட்டும்படி சொல்லப்பட்டது. கடைசியாக வேறு சட்டையில் கூலிப்படையினரைஅடையாளம் காட்ட சொன்னார்கள்.
இவ்வாறு 3 சுற்று அடையாள அணிவகுப்பு நடந்தது.
சங்கரராமனின் மனைவி பத்மா முதல் சுற்றிலேயே கூலிப்படை தலைவன் சின்னாவையும், அம்பிகாபதியையும் அடையாளம்காட்டினார். கொலையாளிகள் மாற்றி நிறுத்தி வைக்கப்பட்டபோதும், பத்மா அவர்களை சரியாக அடையாளம் காட்டினார்.அதேபோல் கணேசும் கூலிப்படையினர் 6 பேரையும் அடையாளம் காட்டினார்.
இதன்மூலம் குற்றவாளிகள் இவர்கள் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அணிவகுப்பு சுமார் ஒரு மணிநேரம்நடந்தது. அணிவகுப்பு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications