ஜெயலட்சுமிக்கு எய்ட்ஸ் பரிசோதனை!!
Subscribe to Oneindia Tamil
மதுரை:
ஏட்டையாவில் ஆரம்பித்து எஸ்.பி வரை பல தரப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது பாலியல் புகார் கூறிய ஜெயலட்சுமிக்கு மதுரைஅரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் நோய் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஜெயலட்சுமி வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் நீதிமன்ற அனுமதியுடன் மதுரை அரசு மருத்துவமனையில்ஜெயட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக ஜெயலட்சுமிக்கு நேற்று எய்ட்ஸ் பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது. ரத்தத்தில் எய்ட்ஸ் நோய்பரிசோதனை நடத்தப்பட்டது.
இதைத் தவிர எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் உள்ளிட்ட வழக்கமான மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. மொத்தம் 4 மணிநேரம் இந்தப் பரிசோதனைகள் நடைபெற்றன.
மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த ஜெயலட்சுமி வழக்கத்துக்கு மாறாக வெட்கப்பட்டார். எய்ட்ஸ் மருத்துவ சோதனைநடத்தப்பட்டதே அதற்குக் காரணம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications