ஜெயேந்திரரை சந்திக்க நடராஜன் விண்ணப்பம்!
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரரை சந்திக்க அனுமதி கோரி முதல்வர் ஜெயலலிதாவின் தோழிசசிகலாவின் கணவர் நடராஜன் விண்ணப்பித்துள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெயேந்திரர் வேலூர் மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்திக்க பல்வேறு பிரமுகர்களும் வந்தவண்ணம் உள்ளனர்.
இந் நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜனும் ஜெயேந்திரரை சந்திக்க இன்று விண்ணப்பித்திருந்தார். ஆனால்இன்று வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று சிறை நிர்வாகம் தெரிவித்து விட்டதால் நடராஜன்இன்று ஜெயேந்திரரை சந்திக்க வரவில்லை.
இருப்பினும் இன்னும் சில நாட்களில் ஜெயேந்திரரை சந்திக்க நடராஜன் வருவார் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications