For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கே.என்.நேருவுக்கு நீதிபதி கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

வருமானத்திற்கு அதிகமாக ரூ. 7.5 கோடி அளவுக்கு சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருதொடர்ந்து 6வது முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகததால் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ. 7.5கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக கூறி திருச்சி மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ்வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி நேரு உள்ளிட்டோருக்கு இதுவரை 6 முறை சம்மன்அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் ஒருமுறை கூட நேரு உள்ளிட்டோர் ஆஜராகவில்லை

.இந் நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது நேருவின் தம்பி ராமச்சந்திரன் மட்டுமே ஆஜராகியிருந்தார்.மற்றவர்கள் வரவில்லை. இதனால் நீதிபதி அதிருப்தி அடைந்தார்.

நேரு குடும்பத்தினர் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வராமல் இருப்பது சரியல்ல, இந்த வழக்கை அடுத்த மாதம் 23ம் தேதிக்குஒத்திவைக்கிறேன். அன்றைய தினம் அனைவரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X