ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் எங்கே?
சென்னை:
| ஜெயேந்திரர் உத்தரவுப்படி கூலிப்படையினரால் தாக்கப்பட்ட சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த சங்கர மட பக்தரான ஆடிட்டர்ராதாகிருஷ்ணன் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் தலைமறைவாக உள்ளதாகத் தெரிகிறது.
ஆடிட்டரான ராதாகிருஷ்ணன் சங்கர மடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மடத்துடனான தொடர்புகளைத்துண்டித்துக் கொண்டார். இந் நிலையில் சோமசேகர கனபாடிகள் என்ற பெயரில், சங்கர மடம் குறித்து அவர் செய்திகளை வெளியிட்டதாகக் கருதியஜெயேந்திரர் தரப்பு, ஆத்திரம் கொண்டு ராதாகிருஷ்ணனை தீர்த்துக் கட்ட முடிவு செய்ததாக போலீஸ் தரப்பு கூறுகிறது. இதன் பேரில், கூலிப் படையினரை ஏவி கடந்த 2002ம் ஆண்டு அவரும் மனைவியும் தாக்கப்பட்டனர். மேலும் ஆட்டோவைவிட்டு மோதியும் அவர்களைக் கொல்ல முயற்சி நடந்தது. ஆனால், இரு முறையும் அவர்கள் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பிவிட்டனர். |
ராதாகிருஷ்ணன் மீதான இந்தக் கொலை முயற்சி வழக்கு காவல் நிலையத்தில் தூக்கம் போட்டுக் கொண்டிருந்தது. பரணில் தூக்கிப்போடப்பட்ட இந்த பைல் இப்போது தூசி தட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயேந்திரரையும் ஒரு குற்றவாளியாகசேர்த்துள்ளனர் போலீசார்.
இந் நிலையில் ராதாகிருஷ்ணன் தலைமறைவாகி விட்டார். ராதாகிருஷ்ணனை சந்தித்துப் பேட்டி எடுக்க பத்திரிக்கை நிருபர்களும்தினமும் அவரது வீட்டுக்குப் படையெடுத்தவண்ணம் உள்ளனர்.
நமது நிருபர் அவரது வீட்டைத் தொடர்பு கொண்டபோது, அவர் திருப்பதி சென்றுள்ளதாக பதில் கிடைத்தது.
உண்மையில் அவர் திருப்பதிதான் சென்றுள்ளாரா அல்லது வழக்கு, பேட்டி தொல்லைக்குப் பயந்து தலைமறைவாகி விட்டாராஎன்று தெரியவில்லை.













Click it and Unblock the Notifications