நதி நீர் பங்கீடு: தமிழக குழு கேரளா பயணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நதி நீர் பங்கீடு குறித்து விவாதிக்க நிதியமைச்சர் பொன்னையன் தலைமையிலான தமிழகக் குழு இன்று கேரளா சென்றுள்ளது.
பொன்னையன் தவிர பொதுப் பணித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், நிதித்துறைச் செயலாளர்நாராயணன், பொதுப்பணித்துறைச் செயலாளர் பழனியப்பன், காவிரி திட்டக் குழு தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் மோகன் கிருஷ்ணன்ஆகியார் இக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
தமிழக அரசின் சிறப்பு விமானத்தில் இவர்கள் திருவனந்தபுரம் சென்றனர்.
கடலில் கலக்கும் கேரள ஆறுகளை தமிழகத்துக்குத் திருப்பி விடுவது குறித்து இந்தக் குழு கேரள அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பேச்சுநடத்தும்.
இன்றே இவர்கள் சென்னை திரும்புவர்.












Click it and Unblock the Notifications