மகாராஷ்டிர கவர்னராக எஸ்.எம்.கிருஷ்ணா நியமனம்
டெல்லி:
மகாராஷ்டிர மாநில ஆளுநராக கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை அம் மாநில ஆளுநராக இருந்த முகம்மத் பைசலின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து கிருஷ்ணாவைஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்தபோது மீண்டும் முதல்வர் பதவியைப் பிடிக்ககிருஷ்ணா முயன்றார். ஆனால், அவருக்கு தேவகெளடாவின் எதிர்ப்பு இருந்ததால், அந்த முயற்சி பலனளிக்கவில்லை.
இதையடுத்து மாநில காங்கிரஸ் தலைவர் பதவி அல்லது தேசிய அளவில் கட்சியில் முக்கிய பதவி கிடைக்கும் என்று நம்பியிருந்தார்கிருஷ்ணா.
ஆனால், அவருக்கு பதவி ஏதும் கிடைக்கவில்லை. இதனால், அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்தனர். இதனால், கர்நாடக முதல்வர்தரம்சிங்குக்கு கட்சிக்குள் கிருஷ்ணா ஆதரவாளர்களால் தொல்லைகள் வர ஆரம்பித்தன.
இதையடுத்து ஆளுநர் பதவி தரப்பட்டு மகாராஷ்டிரத்துக்கு பேக்-அப் செய்யப்பட்டிருக்கிறார் கிருஷ்ணா.