Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

40,000 டன் விமானம் தாங்கிக் கப்பல் கட்டும் இந்தியா!!

Subscribe to Oneindia Tamil

பனாஜி:

25 விமானங்கள் இயக்கும் அளவுக்கு, 40,000 டன் எடையுள்ள விமானம் தாங்கிக் கப்பலை இந்தியாவே கட்ட ஆரம்பித்துள்ளது.

இதற்காக முதல் கட்டமாக ரூ. 3,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத் தகவலை இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் பிரகாஷ் தெரிவித்தார்.

கொச்சியில் உள்ள ராணுவ கப்பல் கட்டும் தளத்தில் இந்தப் பணி நடக்கவுள்ளது என்றார்.

இதுவரை ரஷ்யாவிடம் இருந்து தான் விமானம் தாங்கிக் கப்பல்களை வாங்கி இயக்கி வந்தது இந்தியா. இப்போது தான் முதன்முறையாகஇந்த பிரமாண்டத் திட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.

பிரான்சிடம் இருந்து நீர்மூழ்கிகள் வாங்கும் திட்டம் குறித்துக் கேட்டபோது, கடற்படைத் தளபதியிடம் நிருபர்கள் கேட்டபோது பதிலளித்தமறுத்த அவர், இது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். எப்படியும் நவீன ரக நீர்மூழ்கிகளை வாங்கித் தான் ஆக வேண்டும்என்றார்.

இதற்கிடையே கர்நாடகத்தில் கார்வாரில் கட்டப்பட்டு வந்த சீ-பேர்ட் கடற்படைத் தளத்தின் பணிகள் முடிவடைந்துவிட்டதார அத்திட்டத்தின் துணை இயக்குனர் கமாண்டர் கார்னிக் தெரிவித்துள்ளார்.

புதிய ராணுவத் தளபதி:

இதற்கிடையே இந்தியாவின் புதிய ராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ஜோகிந்தர் ஜஸ்வந்த் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்போதைய தளபதி ஜெனரல் விஜ்ஜின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து சிங் அந்தப்பதவியை ஏற்பார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+