-ஆசியான் மாநாடு: லாவோஸ் சென்றார் மன்மோகன்
டெல்லி:
லாவோஸில் நடைபெற உள்ள இந்தியா--ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் லாவோஸ்புறப்பட்டுச் சென்றார்.
ஆசியான் எனப்படும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பில் புரூனை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து,பிலிப்பின்ஸ், கம்போடியா, லாவோஸ், மியான்மர், வியட்நாம் ஆகிய 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்தியா--ஆசியானின் 3வது உச்சி மாநாடு லாவோஸ் தலைநகர் வியன்டியானில் வரும் 30ம் தேதி நடைபெறுகிறது. மன்மோகன்சிங் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக லாவோஸ் புறப்பட்டுச் சென்றார்.
அங்கு ஆசியான் கார் பந்தயத்தின் லாவோஸ்--இந்தோனேசியா பிரிவுக்கான பந்தயத்தை மன்மோகன் சிங்க கொடி அசைத்துதுவக்கி வைக்கிறார்.
அங்கு ஆசியான் நாடுகளின் தலைவர்களை பிரதமர் சந்தித்துப் பேசுகிறார். ஆசியான் அமைப்பில் புதிதாக சேர்ந்துள்ள சீனா,ஜப்பான், கொரியா நாடுகளின் தலைவர்களையும் அவர் சந்திப்பார்.
மாநாட்டின் இறுதியில் இந்தியா, ஆசியான் இடையே அரசியல், பொருளாதார ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கானஉடன்படிக்கையில் கையெழுத்திடுகிறார்.
இந் மாநாட்டில் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் முதல்முறையாக நடக்கிறது. இதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங் லாவோஸில் இருக்கிறார்.