8 சக வீரர்களை சுட்டு கொன்று ராணுவ வீரர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் ராணுவ முகாம் ஒன்றில் ராணுவ வீரர் ஒருவர் 8 சக வீரர்களைக் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றுவிட்டு தானும்தற்கொலை செய்து கொண்டார்.
பாரமுல்லா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாம் உள்ளது. இந்த முகாமைச் சேர்ந்த ஒரு வீரர் திடீரென தனதுதுப்பாக்கியை எடுத்து தன்னுடன் பணியாற்றிய சக வீரர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார்.
இதில் அந்த முகாமில் இருந்த 8 வீரர்கள் குண்டு பாய்ந்து இறந்தார்கள். இன்னும் சிலர் காயமடைந்தனர். அதன்பிறகு அந்த வீரர்தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இறந்தார்.
அவர் தீவிரவாதிகளின் கையாளா அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவரா என்பது குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.












Click it and Unblock the Notifications