குப்பையில் கிடந்த வாக்காளர் அடையாள அட்டைகள்
திருக்கோவிலூர்:
திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட பொன்னேரி பகுதி வாக்காளர் அடையாள அட்டைகள்,திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள குப்பைத் தொட்டியில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் ஏராளமான வாக்காளர்கள் ஓட்டுப் போட முடியாமல் அவதிப்பட்டனர்.வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தும் கூட, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டிருந்ததால் இந்தக் குழப்பம்ஏற்பட்டது.
இந் நிலையில் மதுரை, சென்னை தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டைகள் குப்பைத் தொட்டிகளில்கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது சென்னை திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் திருக்கோவிலூர் குப்பைத்தொட்டியில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவொற்றியூர் சட்டசபைத் தொகுதி வட சென்னை எம்.பி. தொகுதியின் கீழ் வருகிறது. இந்தத் தொகுதியில் அடங்கியபொன்னேரி, மாதவரம், மணலி, கொடுங்கையூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களின் வாக்காளர் அடையாள அட்டைகள்,திருக்கோவிலூர் கிழக்கு வீதி ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் கிடந்தன.
50க்கும் மேற்பட்ட அடையாள அட்டைகள் கிடந்தது. இதுகுறித்துத் தகவல் அறிந்ததும் வருவாய் அதிகாரிகள் விரைந்து வந்துஇவற்றைக் கைப்பற்றினர். பொன்னேரி தாசில்தாருக்கு இதுகுறித்துத் தகவல் தரப்பட்டுள்ளது.