கருணாநிதி உடல் நலம்: சோனியா விசாரிப்பு
சென்னை:
திமுக தலைவர் மு. கருணாநிதியின் உடல் நலம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் வி.பி.சிங்உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் விசாரித்தார்கள்.
வயிற்றுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை கருணாநிதி அனுமதிக்கப்பட்டார்.தற்போது அவர் உடல்நலம் தேறிவருகிறார்.
சோனியா காந்தி, வி.பி. சிங், மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், கமல்நாத் ஆகியோர் தொலைபேசி மூலம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்து அறிந்தனர்.
கருணாநிதி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று சோனியா காந்தி அப்போது கூறியதாக திமுக வெளியிட்டசெய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன், மத்தியக் குழுஉறுப்பினர் ரங்கராஜன் ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.