பூண்டி ஏரிக்கு வந்தது கிருஷ்ணா நீர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடந்த 23ம் தேதி ஆந்திர மாநில கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று காலை பூண்டி ஏரியைவந்தடைந்தது.
152 கிலோ மீட்டர் தூரத்தை 5 நாட்களில் கிருஷ்ணா நீர் கடந்திருப்பது இதுவே முதல் முறையாகும். கால்வாயில் மழைநீர் தேங்கிஇருந்ததால் தண்ணீர் வேகமாக தமிழக எல்லையை வந்தடைந்துள்ளது.
பூண்டி ஏரியில் இப்போது 225.1 மில்லியன் கன அடி நீர் உள்ளது. ஏரியின் மொத்த நீர் மட்டம் 140 அடி. இதில் 124.7 அடிக்கு நீர்நிரம்பியுள்ளது.
கண்டலேறு அணையில் இருந்து 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட ஆந்திர அரசு திட்டமிட்டிருப்பதால் இன்னும் ஒரு மாதத்திற்குபூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பூண்டிக்கு கூடுதல் தண்ணீர் வரவும் வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications