அவதூறு செய்திகள்: சங்கர மடம் எச்சரிக்கை
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்டு சங்கர மடம் குறித்து அவதூறான, தவறான தகவல்களைவெளியிடுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் சங்கர மடம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து மட மேலாளர் சுந்தரேச அய்யர் கூறுகையில், சங்கரராமன் கொலையைத் தொடர்ந்து பாரம்பரியம் மிக்க காஞ்சிகாமகோடி மடம் குறித்து சில பத்திரிக்கைகளும், டிவி களும் அவதூறான, தவறான, பொய்யான தகவல்களை வெளியிட்டுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இதுபோன்ற தகவல்களால் லட்சக்கணக்கான பக்தர்கள் மனம் வேதனை அடைகிறது. அவர்களது மத உணர்வுகள்புண்படுகின்றன.
உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிடும் இதுபோன்ற பத்திரிக்கைகள், டிவிக்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதுகுறித்து மட நிர்வாகம் பரிசீலித்து வருகிறது என்றார்.
ஜாமீன் மனுக்கள் நாளை விசாரணை:
இந் நிலையில் சங்கரராமன் கொலை வழக்கு மற்றும் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மீதான தாக்குதல் வழக்கில் ஜெயேந்திரர் சார்பில் தாக்கல்செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனுக்கள் மீது நாளை விசாரணை நடைபெறவுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள ஜெயேந்திரர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்துவிட்டது. இந் நிலையில் உயர் நீதிமன்றத்தில் புதிதாக ஒரு ஜாமீன் மனுவை ஜெயேந்திரர் தாக்கல் செய்துள்ளார்.
அதில், தன்னிடம் போலீஸ் விசாரணை முடிவடைந்து விட்டது, அதேபோல குற்றவாளிகள் அடையாள அணிவகுப்பும் முடிந்து விட்டது. மேலும், முக்கியக்குற்றவாளிகளான கதிரவன், சின்னா ஆகியோர் போலீஸ் கொடுமைப்படுத்தியதால்தான் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.
எனவே, என்னை ஜாமீனில் விட வேண்டும் என்று ஜெயேந்திரர் கோரியுள்ளார். இதேபோல, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கிலும் ஜாமீன் கோரிஜெயேந்திரர் சார்பில் சென்னை தன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இரு ஜாமீன் மனுக்கள் மீதும் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் நாளை விசாரணை நடைபெறவுள்ளது.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications