அவதூறு செய்திகள்: சங்கர மடம் எச்சரிக்கை
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்டு சங்கர மடம் குறித்து அவதூறான, தவறான தகவல்களைவெளியிடுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் சங்கர மடம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து மட மேலாளர் சுந்தரேச அய்யர் கூறுகையில், சங்கரராமன் கொலையைத் தொடர்ந்து பாரம்பரியம் மிக்க காஞ்சிகாமகோடி மடம் குறித்து சில பத்திரிக்கைகளும், டிவி களும் அவதூறான, தவறான, பொய்யான தகவல்களை வெளியிட்டுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இதுபோன்ற தகவல்களால் லட்சக்கணக்கான பக்தர்கள் மனம் வேதனை அடைகிறது. அவர்களது மத உணர்வுகள்புண்படுகின்றன.
உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிடும் இதுபோன்ற பத்திரிக்கைகள், டிவிக்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதுகுறித்து மட நிர்வாகம் பரிசீலித்து வருகிறது என்றார்.
ஜாமீன் மனுக்கள் நாளை விசாரணை:
இந் நிலையில் சங்கரராமன் கொலை வழக்கு மற்றும் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மீதான தாக்குதல் வழக்கில் ஜெயேந்திரர் சார்பில் தாக்கல்செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனுக்கள் மீது நாளை விசாரணை நடைபெறவுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள ஜெயேந்திரர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்துவிட்டது. இந் நிலையில் உயர் நீதிமன்றத்தில் புதிதாக ஒரு ஜாமீன் மனுவை ஜெயேந்திரர் தாக்கல் செய்துள்ளார்.
அதில், தன்னிடம் போலீஸ் விசாரணை முடிவடைந்து விட்டது, அதேபோல குற்றவாளிகள் அடையாள அணிவகுப்பும் முடிந்து விட்டது. மேலும், முக்கியக்குற்றவாளிகளான கதிரவன், சின்னா ஆகியோர் போலீஸ் கொடுமைப்படுத்தியதால்தான் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.
எனவே, என்னை ஜாமீனில் விட வேண்டும் என்று ஜெயேந்திரர் கோரியுள்ளார். இதேபோல, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கிலும் ஜாமீன் கோரிஜெயேந்திரர் சார்பில் சென்னை தன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இரு ஜாமீன் மனுக்கள் மீதும் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் நாளை விசாரணை நடைபெறவுள்ளது.
-
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்!












Click it and Unblock the Notifications