இலங்கையுடன் ராணுவ ஒப்பந்தம்: வைகோ எதிர்ப்பு
நாகர்கோவில்:
இந்தியாவும், இலங்கையும் ராணுவ ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கையுடன் இந்தியா ராணுவ ஒப்பந்தத்தைமேற்கொண்டால் அது இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்லாது, தமிழக மீனவர்களுக்கும் மிகப் பெரும் பாதகத்தைஏற்படுத்தும்.
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளேன். இரு நாடுகளிலும் உள்ள தமிழர்களுக்கு மிகப் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் இந்த ஒப்பந்தம் குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.
இந்த ஒப்பந்தத்தின்படி யாழ்ப்பாணம் அருகே உள்ள பலாலி விமான தளத்தை புதுப்பிக்கவும், இலங்கையின் கடற்படைக்கப்பல்களை நவீனப்படுத்தவும் இந்தியா உதவும்.
இவை இரண்டும் நடந்தால் பலாலி விமான தளம் மூலமாக இலங்கையில் உள்ள தமிழர் பகுதிகளை இலங்கை ராணுவம் தனதுஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும். அதேபோல, கடற்படைக் கப்பல்கள் நவீனப்படுத்தப்பட்டால், தமிழக மீனவர்களால்கடலுக்குள்ளேயே போக முடியாத அவல நிலை ஏற்படும் என்றார் அவர்.