சேது சமுத்திரம்: ஜெ. மீது வாசன் புகார்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
சேது சமுத்திரத் திட்டத்திற்கான தடையில்லாச் சான்றிதழைத் தர தமிழக அரசு தாமதம் செய்வதாக காங்கிரஸ் தலைவர்ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசுகையில், தமிழக மக்களுக்கு மட்டுமல்லாது இந்தியாவின் பொருளாதாரவளர்ச்சிக்கு மிகப் பெரும் உதவி புரியப் போகும் சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் தரப்பிலான நடவடிக்கைகள் அனைத்தும் முழு வீச்சில் தொடங்கி நடந்து வருகின்றன. ஆனால் தமிழக அரசின்தரப்பில் தரப்பட வேண்டிய தடையில்லாச் சான்றிதழை மாநில அரசு இன்னும் தராமல் இழுத்தடித்து வருகிறது.
தமிழக அரசின் இந்த போக்கு மிகவும் கண்டனத்துக்குரியது. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தனது போக்கை தமிழக அரசுமாற்றிக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications