பிரார்த்தனையை தொடர்வோம்: தயானந்த சரஸ்வதி
வேலூர்:
ஜெயேந்திரர் விடுதலைக்காக பக்தர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்யுமாறு சுவாமி தயானந்த சரஸ்வதி கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவையைச் சேர்ந்த சின்மயா மிஷன் தலைவரான தயானந்த சரஸ்வதி சுவாமிகள் இன்று வேலூர் சிறைக்குச் சென்று ஜெயேந்திரரைசந்தித்துப் பேசினார். பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயேந்திரர் மனதளவில் உறுதியாகவே உள்ளார்.
தனது கைது குறித்து பக்தர்கள் வருந்த வேண்டாம் என்றும், தொடர்ந்து இறைவனைப் பிரார்த்தித்து வருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த இக்கட்டான நிலையிலிருந்து அவர் விரைவில் விடுபடுவார்.
அவரது உடல் நலம் சிறப்பாகவே உள்ளது. மிகுந்த தைரியமாக இருக்கிறார். தன்னை சந்திக்க வருபவர்களிடம் மிகவும் சகஜமாகபேசுகிறார்.
வழக்கில் உள்நோக்கம் உள்ளதா, இல்லையா என்பது குறித்து கருத்துக் கூற முடியாது. காரணம் தற்போது இது நீதிமன்ற விசாரணையில்உள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications