For Quick Alerts
For Daily Alerts
Just In
தலைமை நீதிபதியாக கட்ஜூ பதவியேற்பு
சென்னை:
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மார்க்கண்டேய கட்ஜு பதவியேற்றுக் கொண்டார்.
ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா, கட்ஜுவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந் நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா, மத்திய சட்டத்துறை இணையமைச்சர் வேங்கடபதி, உள்துறைஇணையமைச்சர் ரகுபதி, சபாநாயகர் காளிமுத்து, மாநில அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மூத்தவழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சுபாஷன் ரெட்டி பல்வேறு காரணங்களால் கேரளாவுக்குஇடமாற்றம் செய்யப்பட்டது நினைவுகூறத்தக்கது.
புதிய நீதிபதி கட்ஜுவுக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருந்தவர் கட்ஜூ.
Comments
Story first published: Sunday, November 28, 2004, 5:30 [IST]