9 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Childrensமும்பை வளையல் தயாரிப்புத் தொழிற்சாலையில் கொத்தடிமைகளாக வேலை பார்ப்பதற்காக அழைத்துக்கொண்டு செல்லப்பட இருந்த 9 சிறுவர்களை போலீசார் மீட்டனர்.

மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் 16 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்கள் அனைவரும்திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்கள்.

நேற்று பிற்பகல் 2 மணியளவில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள போலீஸ் கண்காணிப்பு மையதொலைக்காட்சியில் போலீஸார் பஸ் நிலைய பயணிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு நபர், 9 சிறுவர்களை அழைத்துக் கொண்டு சென்றதைப் பார்த்து சந்தேகமடைந்தனர். உடனடியாகபோலீஸார் அங்கு விரைந்து சென்று அந்த நபரை மடக்கி விசாரித்தனர்.

அப்போது அவரது பெயர் சார்லஸ் என்றும் சிறுவர்களை மும்பைக்கு ரயிலில் அழைத்துச் செல்வதற்காக சென்னைவந்திறங்கியதும் தெரிய வந்தது.

மும்பையில் உள்ள ரக்ஷா என்டர்பிரைசஸ் என்ற வளையல் தயாரிக்கும் நிறுவனத்திற்கு வேலைக்கு சேர்ப்பதற்காகஇந்த சிறுவர்களை திருவண்ணாமலையிலிருந்து சார்லஸ் அழைத்து வந்துள்ளார்.

தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இவர்கள் மும்பை செல்லவிருந்தனர். இதையடுத்து குழந்தைத் தொழில் தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீஸார் சார்லஸை கைது செய்தனர்.

அவரிடமிருந்து மீட்கப்பட்ட 9 சிறுவர்களும் ஷெனாய் நகரில் உள்ள குழந்தைத் தொழிலாளர் மீட்பு இல்லத்திற்குஅனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சிறுவர்கள் வளையல் நிறுவனத்தில் மிகவும் குறைந்த சம்பளத்திற்கு கொத்தடிமைகளாக வேலைக்குசேர்க்கப்படவிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை வீட்டினரின் அனுமதியுடன் தான் சார்லஸ் அழைத்துவந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+