டெல்லி சென்றார் ஜெயலலிதா
சென்னை:
திட்டக் கமிஷன் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா இன்று தனி விமானம் மூலம் டெல்லிபுறப்பட்டுச் சென்றார்.
தமிழகத்திற்கு 2005-2006ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக திட்டக் கமிஷன் துணைத் தலைவர்மாண்டேக் சிங் .அலுவாலியாவுடன் விவாதிக்க ஜெயலலிதா டெல்லி சென்றுள்ளார்.
காலை 11 மணியளவில் தனி விமானத்தில் சென்றார் ஜெயலலிதா.
தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், நிதியமைச்சர் பொன்னையன், நிதித் துறைச் செயலாளர் நாராயணன்ஆகியோர் ஏற்கனவே டெல்லி சென்று விட்டனர்.
இன்று மாலை 3 மணியளவில் அலுவாலியாவுடன் ஜெயலலிதா பேசுகிறார். அப்போது தமிழகத்திற்கான திட்ட நிதிஒதுக்கீடு குறித்து முடிவு செய்யப்படுகிறது.
இதையடுத்து இன்று மாலையே ஜெயலலிதா சென்னை திரும்புகிறார்.
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் டெல்லியில் தங்கியிருந்தால் பா.ஜ.க. தரப்பில் இருந்து தனக்கு ஏதாவதுநெருக்கடிகள் வரலாம் என்பதால் அவர் இந்தப் பயணத்தை சுருக்கமாக வைத்துக் கொண்டதாகத் தெரிகிறது.
பிரதமர் மன்மோகன்சிங்கைக் கூட ஜெயலலிதா சந்திப்பாரா என்பதும் சந்தேகத்திற்கிடமாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications