இந்தியாவின் புல்லட் டிரெயின்கள்: ஜப்பானுடன் பேச்சு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழகம் உள்ளிட்ட சில இடங்களில் அதிவேக புல்லட் ரயில்களை இயக்குவது குறித்து மத்திய அரசு ஆய்வு நடத்தப் போவதாகநாடாளுமன்றத்தில் ரயில்வேத்துறை அமைச்சர் வேலு தெரிவித்தார்.
மக்களவையில் பேசிய அவர்,
ஜப்பானைப் போல அதிவேக புல்லட் ரயில்களை இயக்குவது குறித்த ஆய்வுப் பணி நடந்து வருகிறது. மும்பை-அகமதாபாத் இடையேமுதலில் இந்த ரயிலை இயக்கத் திட்டமிடப்பட்டு, அதன் சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வு நடக்கிறது. இம் மாத இறுதியில் அந்தப் பணிமுடிவடைந்துவிடும்.
இதைத் தவிர தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், மேற்குவங்கத்திலும் இந்த ரயில்களை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வுநடத்தப்படும்.
இது குறித்து ஜப்பானிய அரசுடனும் இந்திய ரயில்வே பேசி வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications