ஜெயேந்திரருக்கு சலுகை: சிறை அதிகாரிக்கு நோட்டீஸ்
சென்னை:
வேலூர் சிறையில் ஜெயேந்திரக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவது தொடர்பாக சிறைக் கண்காணிப்பாளருக்கு வக்கீல்நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற பெரியார் வழக்கறிஞர்கள் பேரவை சார்பில் வழக்கறிஞர் துரைசாமி, வேலூர் மத்திய சிறையின்கண்காணிப்பாளருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
சிறையில் ஜெயேந்திரருக்கு சிறப்பு சலுகை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடவில்லை. சிறையில் மற்றகைதிகளுக்கு உள்ள வசதிகள் மட்டுமே அவருக்கும் தரப்பட வேண்டும்.
ஆனால் அவருக்கு சிறையில் தனியாக உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படுவதாகவும், அவர் குளிக்க சுடுநீர்வழங்கப்படுவதாகவும் பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகி உள்ளது. விடுமுறை நாட்களிலும் அவரை சந்திக்கவெளியாட்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
சிறையில் அவர் பூஜை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் கொலை வழக்கில் கைதான மற்ற கைதிகளுக்கு இந்தசலுகைகள் வழங்கப்படுவது இல்லை. நீங்கள் சிறை விதிகளுக்கு எதிராக செயல்படுகிறீர்கள்.
எனவே ஜெயேந்திரருக்கு அளிக்கப்படும் சலுகைகளை உடனே நிறுத்த வேண்டும். இல்லையென்றால் உங்கள் மீது சட்டப்படிநடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications