புதிய ரேஷன் கார்டு: அரசு அறிவிப்பு
சென்னை:
தமிழகத்தில் தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகள் மேலும் 6 மாதத்திற்கு செல்லும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் தற்போது உபயோகத்தில் உள்ள 1.52 கோடி ரேஷன்கார்டுகள் வருகிற 31ம் தேதியுடன் முடிவடைகின்றன.
இதையடுத்து புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படவுள்ளன. புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது ஆகும் கால அவகாசத்தைக்கருத்தில் கொண்டு தற்போதுள்ள ரேஷன் கார்டுகளை மேலும் 6 மாதத்திற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் தற்போது ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களுடன் தற்போதைய ரேஷன் கார்டுகள் மேலும் 6 மாதத்திற்கு பயன்படுத்தப்படும்.அதற்குரிய உள்தாள்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளிலேயே கிடைக்கும்.
மேலும் கடந்த ஜூலை மாதம் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு இந்த மாதம் புதிய கார்டுகள்கொடுக்கப்படவுள்ளன என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.