சாமியாரை மிரட்டிய எஸ்ஐ கைது
கோவில்பட்டி:
போலிச் சாமியார் என்று வழக்குப் போட்டு விடுவதாக கூறி சாமியாரை மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற பணிநீக்கம் செய்யப்பட்டசப் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் சாமியார்கள் தொடர்ச்சியாக போலீஸில் சிக்கி வருகின்றனர். இதைப் பயன்படுத்தி ஒரு நிஜச்சாமியாரிடம் பணம் பறிக்க முயன்ற, பணிநீக்கம் செய்யப்பட் சப் இன்ஸ்பெக்டர் வளைத்துப் பிடிக்கப்பட்டுள்ளார்.
கோவில்பட்டி அருகே உள்ள சிந்தலக்கரை என்ற பகுதியில் மாரியம்மன் கோவில் வைத்திருப்பவர் ராமமூர்த்தி சாமியார். இவர்கோயிலில் தங்கி அருள் வாக்கு சொல்லி வருகிறார்.
இவரது கோயிலுக்கு ஒருவர் வந்துள்ளார். நீ போலிச் சாமியார் என்று போலீஸில் புகார் வந்துள்ளது. பெண்களையும் நீ மோசடிசெய்துள்ளாய், பாலியல் முறைகேடுகளிலும் ஈடுபட்டுள்ளாய். எனவே அதிலிருந்து உன்னைக் காப்பாற்ற பணம் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் பல வழக்குகளை உன்மீது போட வைப்பேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.
அவரது தோற்றம், பேச்சு ஆகியவற்றின் மீது சந்தேகம் கொண்ட சாமியாரும், அங்கிருந்த பக்தர்களும் அந்த நபரை விசாரிக்கத்தொடங்கியுள்ளனர். இதையடுத்து அந்த நபர் தான் வந்த டிஎவிஎஸ்50 வாகனத்தில் ஏறி தப்ப முயன்றுள்ளார்.
இதையடுத்து அனைவரும் சேர்ந்து அவரை விரட்டிப் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். காவல் நிலையத்தில் நடந்தவிசாரணையில் அந்த நபரின் பெயர் சுப்பையா பாண்டியன் என்பதும், பணிநீக்கம் செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் என்றும்தெரிய வந்தது.
திருச்செந்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட பல இடங்களில் அவர் பணியாற்றியுள்ளார். இவர் மீது எழுந்த பல்வேறு புகார்கள்,மோசடிகள் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
கோவில்பட்டி போலீஸார் சுப்பையா பாண்டியனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.












Click it and Unblock the Notifications