ஜோதிடர் வீட்டில் ரூ.3.30 லட்சம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
அறந்தாங்கியைச் சேர்ந்த ஒரு ஜோதிடர் வீட்டில் ரூ.3.30 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரொக்கப்பணம்கொள்ளையடிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் ஒரு ஜோதிடர். இவரது மனைவி ரேவதி, மகளிர் சுயஉதவிகுழு தலைவியாக உள்ளார்.
இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பினர். அப்போது அவர்களது வீட்டின் முன்பக்ககதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டிற்குள் வந்து பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகையும், ரூபாய் 30,000ரொக்கப்பணமும் களவு போயிருப்பது தெரியவந்தது.
நகையின் மொத்த மதிப்பு ரூ.3.30 லட்சம் ஆகும். இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications