For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரேம்குமாரை மாற்ற கோரி ஆளுநரிடம் பாஜக மனு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

SP Prem Kumarஜெயேந்திரர் வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரியான எஸ்.பி. பிரேம்குமாரை மாற்றி விட்டு வேறு அதிகாரியை நியமிக்கதமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி ஆளுநர் பர்னாலாவிடம் தமிழக பாஜக தலைவர்கள் மனு கொடுத்துள்ளனர்.

பாஜக தேசிய செயலாளர் இல.கணேசன், தமிழக பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பொதுச் செயலாளர் குமாரவேலு ஆகியோர்ஆளுநர் மாளிகைக்கு சென்று பர்னாலாவை சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்தனர்.

அதில், காஞ்சி சங்கராச்சாரியார் தொடர்புடைய வழக்குகளை விசாரித்து வரும் காவல்துறைக் கண்காணிப்பாளர் பிரேம்குமார் மீது 2வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2 வழக்குகளிலும் நீதிமன்றங்களால் அவர் கடுமையாக கண்டிக்கப்பட்டவர். அவர் மீது சுமத்தப்பட்டுள்ளபுகார்கள் மிகவும் கடுமையானவை.

மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு டிஐஜி செய்த பரிந்துரை இன்னும் அமல்படுத்தப்படாமல் தமிழக அரசிடம்உள்ளது. மேலும், அவரை எஸ்.பி. பதவியிலிருந்து நீக்கக் கோரும் ரிட் மனுவும் நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

இந் நிலையில் ஆளுநர் பர்னாலா தலையிட்டு பிரேம்குமாரை மாற்றி விட்டு அவருக்குப் பதில் வேறு ஒரு நல்ல, தூய்மையான,நேர்மையான அதிகாரியை சங்கராச்சாரியார் வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக நியமிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்அல்லது ஆலோசனை கூற வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X