கிரிக்கெட் அணியின் வங்கதேச பயணம் ஒத்திவைப்பு
டாக்கா :
தீவிரவாதிகமின் மிரட்டலைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் வங்கதேச பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்திய வீரர்களுக்கு வங்கதேசத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இந்திய பாதுகாப்பு குழு இன்றுடாக்கா செல்கிறது.
2 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி நாளை வங்கதேசத்திற்கு செல்வதாக இருந்தது.இந் நிலையில் , இந்திய கிரிக்கெட் வீரர்கள் வங்கதேசம் வந்தால் கொல்லப்படுவார்கள் என்று அர்கத் - அல் - ஜிகாத் என்ற தீவிரவாதஅமைப்பு டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பியது.
இதனையடுத்து இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் அந் நாட்டு உள்துறைஅமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்தது.
இந் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வங்கதேச பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய வீரர்களுக்குவங்கதேசத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட இந்திய பாதுகாப்பு குழு இன்று டாக்கா செல்கிறது.
இக் குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசம் செல்வது உறுதியாகும்.












Click it and Unblock the Notifications