ஜெயலலிதாவுக்கு பெஜாவர் மடாதிபதி கடிதம்
ஹம்பி (கர்நாடகா):
ஜெயேந்திரரை சிறைக் காவலிலிருந்து மாற்றி வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடுப்பி பெஜாவர்மடாதிபதி ஸ்ரீவிஸ்வதீர்த்த சுவாமிகள் கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹம்பியில் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயேந்திரர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுசரியான செயலன்று. உடனடியாக அவர் வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட வேண்டும்.
அவர் மீதான புகார்களை விசாரிக்க தமிழக அரசுக்கு முழு உரிமை உள்ளது. அதேசமயம் அவரது மரியாதையைக் குலைக்கும் விதத்தில்நடந்து கொள்ளக் கூடாது.
வீட்டுக் காவலுக்கு ஜெயேந்திரரை மாற்றி, தினசரி அவர் செய்யும் பூஜைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
குற்றவாளியா, இல்லையா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும் வரை அவரை வீட்டுக் காவலில் வைக்க வேண்டும். இதுதொடர்பாகஜெயலலிதாவுக்கு நான் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளேன் என்றார்.












Click it and Unblock the Notifications