போதை: விமான நிலையத்தில் கலாட்டா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பெண் அதிகாரியிடம் குடிபோதையில் கலாட்டா செய்த இலங்கைத் தொழிலதிபர் கைதுசெய்யப்பட்டார்.
இலங்கையைச் சேர்ந்த ஆனந்தராஜா (42) ஞாயிற்றுக்கிழமை முழு போதையில் விமான நிலையத்துக்கு வந்தார். ஏர் லங்கா விமானத்தில்ஏறி அவர் கலாட்டா செய்யவே அவரை இறக்கிவிட்டுவிட்டுச் சென்றனர் விமான சிப்பந்திகள்.
இந் நிலையில் டிக்கெட்டை திங்கள்கிழமைக்கு மாற்றிக் கொண்டு நேற்று மீண்டும் வந்தார் ஆனந்த ராஜா. இந்த முறையும் முழு போதை.ஏர்லங்கா கெளண்டருக்குச் சென்றவர் அங்கிருந்த பெண் அதிகாரியான பிருந்தாவிடம் கலாட்டாவில் இறங்கினார்.
ஆபாச வார்த்தைகளால் திட்டி அவர் கலாட்டா செய்யவே, விமான நிலையப் போலீசார் அவரைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications