தற்கொலை: மாணவிகள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிளஸ் ஒன் மாணவியின் சாவுக்குக் காரணமான ஆசிரியையைக் கைது செய்யக் கோரி சென்னையில் பள்ளி மாணவிகள் போராட்டத்தில்இறங்கினர்.
சென்னை சூளைமேடு நெடுஞ்சாலைப் பகுதியில் உள்ள ஜெயகோபால் கரோடியா மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்தவர்செல்வகுமாரி. இவர் சனிக்கிழமை தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளி ஆசிரியை ஒருவர் செல்வகுமாரியை வாய்க்கு வந்தபடி திட்டிய காரணத்தாலேயே அவர் தூக்குப் போட்டுக் கொண்டதாக புகார்கூறப்படுகிறது. இந் நிலையில் இன்று பள்ளிக்கு வந்த மாணவிகள் பள்ளிக்குள் செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து ஆசிரியை மீது உரிய நடவடிக்கைஎடுக்கப்படும் என உறுதி மொழி அளித்தனர். அதைத் தொடர்ந்தே மாணவிகள் போராட்டத்தைக் கைவிட்டனர்.












Click it and Unblock the Notifications