ஜெ. நாளை தென் மாவட்ட பயணம்
ஆண்டிப்பட்டி:
| தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அதி நவீன அரசு மருத்துவமனையை முதல்வர் ஜெயலலிதா நாளை திறந்து வைக்கிறார்.
கடந்த சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போதே, தனது சொந்தத் தொகுதியான ஆண்டிப்பட்டியில் மருத்துவக் கல்லூரியும்,மருத்துவமனையும் அமைப்பதாக வாக்குறுதி தந்திருந்தார் ஜெயலலிதா. தற்போது அதை செயல்படுத்தத் தொடங்கியுள்ளார். |
ஆண்டிப்பட்டி-தேனி மெயின் ரோட்டில் உள்ள மேல் மங்கலம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனைக்கும், மருத்துவக்கல்லூரிக்கும் கடந்த 2002ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார் ஜெயலலிதா.
45 ஏக்கர் பரப்பளவில் இந்த மருத்துவக் கல்லூரியும், மருத்துவமனையும் அமைக்கப்பட்டுள்ளன. 300 படுக்கைகள் கொண்டதாகமருத்துவமனை அமைந்துள்ளது. மருத்துவக் கல்லூரியில் 100 மாணவர் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மொத்தம் ரூ. 27.39 கோடி மதிப்பில் மருத்துவமனையும், மருத்துவக் கல்லூரியும் அமைக்கப்பட்டுள்ளன. நாளை காலை நடக்கும்விழாவில் மருத்துவமனையை திறந்து வைக்கிறார் ஜெயலலிதா.
இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் வரும் ஜெயலலிதாவுக்காக சிறப்பு ஹெலிபேட்அமைக்கப்பட்டுள்ளது. விழா நடக்கும் இடத்தில் பிரமாண்டமான பந்தலும் அமைக்கப்பட்டுள்ளது.
நாளை காலை சிறப்பு விமானத்தில் மதுரை சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஆண்டிப்பட்டி செல்லும் ஜெயலலிதா காலை 11.30மணியளவில் மருத்துமனையைத் திறந்து வைக்கிறார்.
இதைத் தொடர்ந்து தேனி மாவட்ட வளர்ச்சிப் பணிகளுக்கான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
ஆண்டிப்பட்டி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிற்பகல் 12.30 மணிக்கு தூத்துக்குடி செல்கிறார் ஜெயலலிதா.
| அங்கு அனல் மின் நிலையத்தின் வெள்ளி விழாவில் பங்கேற்கிறார். இதற்காக துறைமுக மேல்நிலையப் பள்ளி மைதானத்தில் ஹெலிபேட்அமைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நெல்லை மாவட்டம் செட்டிக் குளத்தில் ரூ. 12 கோடியில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலை மின் தயாரிப்புத் திட்டத்தைஜெயலலிதா தொடங்கி வைக்கிறார். ஜெயலலிதாவின் இந்த தென் மாவட்ட சுற்றுப் பயணத்தையொட்டி மதுரை, தேனி, தூத்துக்குடி, நெல்லையில் மிக பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. |
|














Click it and Unblock the Notifications