தெகல்கா ஊழல்: பாஜக தலைவர் மீது சிபிஐ வழக்கு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தெகல்கா ஆயுத பேர ஊழல் விவகாரத்தில் பா.ஜ.க. முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமண், பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ்பெர்னாண்டசின் சமதா கட்சித் தலைவர் ஜெயா ஜேட்லி ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
பாதுகாப்புத்துறையில் நிலவும் ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த தெகல்கா இணையதளம் மீதே வழக்கைப் போட்டு அவர்களைடார்ச்சர் செய்தது அப்போதைய பா.ஜ.க. அரசு என்பது நினைவிருக்கலாம்.
விவகாரத்தில் சிக்கிய பங்காரு, ஜெயா ஜேட்லி மற்றும் ராணுவ அதிகாரிகளை விட்டுவிட்டு தெகல்கா மீது விசாரணை நடத்த ஒரு கமிஷன்போட்டது மத்திய அரசு.
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் முதலில் அந்த கமிஷனைக் கலைத்தது காங்கிரஸ் கூட்டணி அரசு. இதையடுத்து இப்போது பங்காருமற்றும் ஜெயா ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications