எந்நேரத்திலும் உஷா கைது: சித்தூர் எஸ்பி
திருப்பதி:
ஸ்ரீரங்கம் உஷா மீதான வங்கிப் பணம் மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் நிலுவையில் உள்ளதால் அவர்எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்வி.வி.கோபாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உஷா மற்றும் அவரது கணவர் நாராயணன் காளஹஸ்தி ஸ்டேட் பாங்க் ஆப்இந்தியா கிளையில் ரூ. 30 லட்சம் அளவுக்கு கடன் வாங்கி விட்டு அதைத் திருப்பிச் செலுத்தாது குறித்து வங்கியிலிருந்து கடந்த 2001ம்ஆண்டு புகார் கொடுக்கப்பட்டது.
அந்தப் புகாரின் பேரில் உஷா மற்றும் நாராயணனை கைது செய்ய ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.அது தற்போதும் நிலுவையில்தான் உள்ளது. இந்த வழக்கில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் கைதுவாரண்ட்டை நாங்கள் அமலாக்குவோம் என்றார் அவர்.
அதே நேரத்தில் சங்கரராமன் கொலை வழக்கில் உஷாவிடம் விசாரணை நடத்திய காஞ்சிபுரம் போலீஸார், மேலும் விசாரணைக்கு அவர்தேவைப்படலாம் என்று சித்தூர் போலீஸாரிடம் கூறியுள்ளனர்.
எனவே காஞ்சி போலீசாரின் விசாரணைக்குப் பிறகே உஷாவை ஆந்திர போலீஸ் கைது செய்யும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications