சங்கராச்சாரியார் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு?
சென்னை:
ஜெயேந்திரருக்கு எதிராக குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யவும் காவல்துறை முடிவு செய்துள்ளதாக குண்டைப் போடுகின்றனர் சிலஅதிகாரிகள்.
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுபவர் ஒரு வருடம் ஜாமீனில் வெளிவர முடியாது. சென்னை போலீஸ் ஸ்ஷெல் ஆக்ட் சட்டப்படிஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டுமானால் அவர் மீது 3 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அல்லது ஓரிரு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும். பெரும்பாலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலே போலீஸார்குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர்.
இப்போது ஜெயேந்திரர் மீது சங்கரராமன் கொலை வழக்கு, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு மற்றும் எழுத்தாளர் அனுராதாரமணன் கொடுத்த பாலியல் புகார் வழக்கு ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மூன்றுமே மகா கிரிமினல் வழக்குகள்.
எனவே, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் வாய்ப்பிருப்பதாக சில போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். அப்படிப்பட்டசிந்தனையே எங்களுக்கு இல்லை என இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் மறுக்கின்றனர்.
ஆனால், வழக்கை அரசுத் தரப்பு கொண்டு செல்லும் விதத்தை வைத்து அடுத்து என்ன நடக்கலாம் என்ற யூகத்துக்கு வரும் சில அதிகாரிகள்,குண்டர் சட்டம் பாயவும் வாய்ப்பிருப்பதாகவே சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications