சதுர்வேதியின் சீடர்-கம்-ஆடிட்டர் சரண்
சென்னை:
போலிச் சாமியார் சதுர்வேதியின் சீடர் மற்றும் ஆடிட்டர் என்று கூறப்படும் லட்சுமி நாராயணன் என்ற ஸ்ரீபதி சென்னை சைதாப்பேட்டைநீதிமன்றத்தில் சரணடைந்தார்.
திருச்சியைச் சேர்ந்த போலிச் சாமியார் சதுர்வேதி பல பெண்களிடம் பாலியல் கொடுமை செய்ததாகக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.அவருக்கு பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலும் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந் நிலையில் சதுர்வேதியின் சீடர்கள் என்று கூறப்படும் இருவரை ஏற்கனவே போலீஸார் கைது செய்துள்ளனர். தற்போது மேலும் ஒருசீடர்-கம்-ஆடிட்டர் சென்னை கோர்ட்டில் சரண்டைந்துள்ளார்.
லட்சுமி நாராயணன் என்ற ஸ்ரீபதி எனப்படும் அந்த சீடர் சைதாப்பேட்டை 11வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.அவரை டிசம்பர் 15ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி பிரபுதாஸ் உத்தரவிட்டார்.
இதற்கிடையே சதுர்வேதியின் தி.நகர் மடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட கம்ப்யூட்டர்கள், புத்தகங்கள் உள்ளிட்டவற்ரை போலீஸார்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
ஏற்கனவே வைர, தங்க நகைகள், கவசங்கள், கிரீடங்கள், தங்க பூணூல், தங்க அரைஞான் கயிறு உள்ளிட்டவற்றை போலீஸார் கோர்ட்டில்ஒப்படைத்துள்ளனர். (இந்த சதுர்வேதியிடம் தங்க டவுசர் மட்டும் தான் இல்லை!)












Click it and Unblock the Notifications