தாக்குதலுக்கு சங்கர மடமே காரணம்: ஆடிட்டர் புகார்
சென்னை:
தன் மீது நடந்த கொலை வெறித் தாக்குதலுக்கு சங்கர மடம் தான் காரணம் என்று ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கடந்த ஆண்டேபோலீசாருக்குத் தகவல் தெரிவித்ததாக இன்று நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட லட்சுமணன், பூமிநாதன், சுந்தர், ஆனந்த்குமார், கண்ணன்,சின்னக்குமார் ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனு இன்று சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த 6 பேர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவிக்குமார் பேசுகையில்,
2 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்துக்கு சங்கரராமன் கொலையில் கைதான கதிரவன் தந்த வாக்குமூலத்தை வைத்து இப்போது இந்த 6பேரையும் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது போலீஸ்.
ஆனால், கதிரவனோ தான் கொடுக்க ஒப்புதல் வாக்குமூலத்தை மறுத்துள்ளான். அதை அடிப்படையாக வைத்து இவர்களைக் கைதுசெய்ததே தவறு. இவர்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றார்.
இதை மறுத்துப் பேசிய அரசு வழக்கறிஞர் துரைசாமி, இந்த வழக்கில் 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இப்போது இந்த 6 பேர்தவிர சங்கராச்சாரியார், கதிரவன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பு, ரவி சுப்பிரமணியம் தலைமறாைக உள்ளனர்.
2 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக இப்போது தான் குற்றவாளிகள் யார் என்ற அடையாளம் தெரிந்தது.
கடந்த ஆண்டு போலீசாருக்கு ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் இரண்டு கடிதங்களை அனுப்பினார். அதில் தன் மீது நடந்த கொலை வெறித்தாக்குதலுக்கு சங்கரமடம் தான் காரணம் என்றும், இனிமேல் தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டாலும் அதற்கும் மடம் தான்பொறுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார் ராதாகிருஷ்ணன் என்றார்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
-
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க












Click it and Unblock the Notifications