For Daily Alerts
Just In
ரகுவிடம் ஆரம்பமாகும் விசாரணை
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்குத் தொடர்பாகவும், சங்கர மடத்தின் கல்வி நிலையங்கள் விடுதிகளில் நடந்த மர்மச் சாவுகள், பெண் தொடர்புகள் தொடர்பாக எழுப்பப்படும் பிரச்சனைகள் குறித்து இளையவரின் தம்பி ரகுவிடம் இன்று போலீசார் விசாரணை நடத்துவர் என்று தெரிகிறது.
மடத்தின் பெண் விவகாரத்தில் முக்கியமான அடிபடும் பெயரே ரகுவுடையது தான். மடத்தில் இவரது நாட்டாமை ஆரம்பித்த பிறகே எல்லா கெட்ட விஷயங்களும் மடத்துக்குள் வந்ததாக சங்கர மடத்தின் மீது பெரும் மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கும் பலரும் கூறுகின்றனர்.
சங்கர மடம் நடத்தும் கல்வி நிலையங்களின் பெண்கள் விடுதிகளில் ரகுவின் ஆட்டம் அதிகமாக இருந்துள்ளது.
இதுவரை ரகுவிடம் அரசல் புரசல் விசாரணையே நடத்தி வந்த போலீசார் இம்முறை அவரை சம்மன் அனுப்பி முறைப்படி விசாரித்து கைது செய்யவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
Comments
Story first published: Friday, December 10, 2004, 5:30 [IST]