ஊர்வசி கணவருக்கு முன் ஜாமீன்
சென்னை:
மாநகராட்சி ஊழியரை தாக்கிய வழக்கில் நடிகை ஊர்வசியின் கணவர் மனோஜ் கே.ஜெயனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன் ஜாமீன்வழங்கியுள்ளது.
ஊர்வசியின் கணவரானமனோஜ் கே ஜெயனும் அவரது நண்பர் வெங்கடேச பெருமாள் என்பவரும் இரு வாரங்களுக்கு முன் சென்னைசெளகார்ப்பேட்டை பகுதியில் காரில் வந்தனர்.
அப்போது அப் பகுதியில் நின்றிருந்த சென்னை மாநகராட்சி குப்பை லாரியின் டிரைவர் முத்து இருளாண்டிக்கும் ஜெயனுக்கும் இடையேதகராறு ஏற்பட்டது.
தன்னை ஜெயன் தாக்கியதாக காவல் நிலையத்தில் முத்து இருளாண்டி புகார் செய்தார். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்யமுயன்றனர்.
ஆனால், ஜெயனும், வெங்கடேச பெருமாளும் தலைமறைவாகி விட்டனர். இருவரும் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்மனு செய்தனர்.
இந்த மனுக்களை இன்று விசாத்த நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம் இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications