மணல் திருட்டை தடுக்க முயன்ற துணை தாசில்தார் லாரி ஏற்றி கொலை
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அருகே மணல் திருட்டைத் தடுக்க முயன்ற துணை தாசில்தார் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார். இது தொடர்பாகஅதிமுக பிரமுகரான லாரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாசில்தார் மனோகரன் தலைமையிலான ஒரு குழு இன்று அதிகாலைபாலாற்றங்கரைப் பகுதிகளில் மணல் திருட்டைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். முதலில் ஒரு லாரியைப்பிடித்தனர்.
அதிகாரிகளைப் பார்த்ததும் லாரி ஓட்டுநர் தப்பியோடி விட்டார். பின்பு அந்த லாரி தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
அதனையடுத்து ஒரு லாரி வேகமாக வந்தது. அதிகாரிகளைப் பார்த்ததும் லாரி ஓட்டுநர் வண்டியை பின்னோக்கி ஓட்டி தப்பிக்கப்பார்த்தார். உடனே லாரியை நோக்கி துணை தாசில்தார் ஆறுமுகம் விரைந்து சென்றார்.
லாரியின் கதவைத் திறந்து ஒட்டுநரைப் பிடிக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த லாரி டிரைவர் ஆறுமுகத்தைக் கீழே தள்ளிஅவர் மீது வண்டியை ஓட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார்.
அவரை கொன்று விட்டுத் தப்பிய லாரி டிரைவரை போலீஸார் தேடி வருகிறார்கள். இந்த லாரிக்கு உரிமையாளர் ஒரு அதிமுகபிரமுகர் என்பது தெரிந்து போலீஸார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்புதான் இதே செங்கல்பட்டு மாவட்டத்தில் மணல் திருட்டைத் தடுக்க முயன்ற தாசில்தார் லாரி ஏற்றிக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பத்துக்கு ரூ. 5லட்சம்: ஜெ.
இந் நிலையில் துணை தாசில்தார் ஆறுமுகத்தின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு தர முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், துணை வட்டாட்சியர் ஆறுமுகம் திருட்டு மணல் லாரியைப் பிடிக்கமுயன்று பலியான தகவல் மிகுந்த துயரத்தை கொடுத்துள்ளது.
அவரை இழந்து வாடும் ஆறுமுகத்தின் மனைவி, குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அவரது கடமையுணர்வையும், அச்சமில்லாமல் துணிச்சலுடன் தனது பணியை செய்ய முயன்றமைக்காகவும் அவரதுகுடும்பத்துக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications