பத்திரிக்கை ஆசிரியரிடம் போலீஸ் விசாரணை
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில், சென்னையைச் சேர்ந்த தொழில் வணிக மலர் என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் நரசிம்மனிடம்காஞ்சிபுரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக பலரையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். அந்த வரிசையில், தொழில் வணிகமலர் ஆசிரியர் நரசிம்மனுக்கும் சம்மன் போனது. சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக அவர் தனது பத்திரிக்கையில் ஒருகட்டுரை எழுதியிருந்தார்.
இதையடுத்து அதுகுறித்து விசாரிக்க நரசிம்மன் வரவழைக்கப்பட்டிருந்தார். சுமார் 2 மணி நேர விசாரணைக்குப் பின்னர் அவர்செய்தியாளர்களிடம் கூறுகையில், வணிக நோக்கத்துடன் ஒரு மடாதிபதி செயல்படக் கூடாது என்று ஒரு கட்டுரைஎழுதியிருந்தேன். அதுகுறித்தும், ரவிசுப்ரமணியம் குறித்தும் என்னிடம் கேட்டார்கள் என்றார்.
இதேபோல, ஜன கல்யாண் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பசுபதியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.