கவலைக்கிடமான நிலையில் நரசிம்மராவ்
டெல்லி:
முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது இதயத்துடிப்பு சீராக இல்லாததால் பேஸ் மேக்கர் கருவி மூலம் இதயத் துடிப்பு முறைப்படுத்தப்பட்டு வருகிறது.
83 வயதான ராவ் ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். அவருக்கு நேற்று மீண்டும் மாரைடப்பு ஏற்பட்டது.
இப்போது அவரது உடல் நிலை சீரடைந்து வருவதாகவும், ஆனால் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே இருப்பதாகவும்மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் நரசிம்மராவை பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோர் நேரில் சென்று பார்த்தனர்.
ஆனால், பெரும்பாலான மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வரவில்லை.












Click it and Unblock the Notifications