ரெயில்- வேன் மோதல்: 4 ஐயப்ப பக்தர்கள் பலி
விழுப்புரம்:
தண்டவாளத்தைக் கடக்க முயன்ற வேன் மீது அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் வேனில் பயணம் செய்த 4 ஐயப்ப பக்தர்கள்பலியானர்கள். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.
விழுப்புரம் அருகே சாமியாடிகுச்சிபாளையத்தில் ஆளில்லாத ரயில்வே கேட் ஒன்று உள்ளது. இதை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இன்றுஅதிகாலை 5.30 மணிக்கு நெருங்கியபோது, வேன் ஒன்று தண்டவாளத்தைக் கடக்க முயன்றது.
அப்போது வேன் மீது ரயில் மோதியது. இதில் வேன் நொறுங்கியது. அதோடு வேனின் ஒரு பகுதி 1 கி.மீ. தொலைவிற்கு இழுத்துச்செல்லப்பட்டது.
சாமியாடிகுச்சிப்பாளைத்தைச் சேர்ந்த பழனி (40), நைனார்பாளையத்தைச் சேர்ந்த பிரசாந்த் (13), பாண்டிச்சேரியைச் சேர்ந்த டிரைவர்சீனிவாசன் (25) ஆகியோர் இந்த விபத்தில் பலியானார்கள். ஜனார்த்தனன் (35) என்பவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும்வழியில் இறந்தார்.
பழனியின் இரண்டு குழந்தைகள் வெங்கடேசன் (12), வனஜா (11), சக்திவேல் (30), அவரது தம்பி ஜெயவேல் (23), சுந்தரபாண்டியன்(35), புண்ணியகோடி (35), பிரபு (22), பாலகுரு (24), பிரகாஷ் (10), அரி (25) ஆகிய 10 பேர் விபத்தில் காயமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் வானூர் அருகே உள்ள நைனார்பாளையத்தைச் சேர்ந்தவர்கள். சபரிமலைக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பியபோது,இந்த விபத்து நிகழ்ந்தது.
காயமடைந்தவர்களுக்கு விழுப்புரம் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்குஅனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications