ஜெயேந்திரர்: பாஜக மீது விஎச்பி தாக்கு
கொல்கத்தா:
ஜெயேந்திரர் கைது விவகாரத்தை நாடாளுமன்றத்தில் உரிய முறையில் பிரச்சினையாக்க பாஜக தவறி விட்டது என்று விசுவ இந்து பரிஷத்தலைவர் அசோக் சிங்கால் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
ராமஜென்ம பூமி விவகாரம் பெரிதானபோது, 18 நாட்களுக்கு நாடாளுமன்றம் நடைபெறவில்லை. ஆனால் ஜெயேந்திரர் கைது அதைவிடப் பெரிய விவகாரம். அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் பொய்க் குற்றச்சாட்டுகள் பொறுத்துக் கொள்ள முடியாதவை.
இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் ஸ்தம்பித்துப் போயிருக்க வேண்டும். பாஜக இந்த விவகாரத்தை உரிய முறையில் எழுப்பியிருக்கவேண்டும். நாடாளுமன்றத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் எல்லாம் முதுகெலும்பற்றவர்கள்.
இந்து மதத்தை இழிவுபடுத்தும் இத்தகைய விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பாமல் நாம் ஏன் இந்த நாட்டில் வாழவேண்டும்?
பாஜகவினர் இதற்காக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். பின்பு விலைவாசி உயர்வு பிரச்சினைக்குப் போய் விட்டார்கள்.அவர்களுக்கு இந்துத்துவாவை விட விலைவாசி உயர்வே முக்கியமாக இருக்கிறது.
அத்வானி பாஜக தலைவரான பின்பும் இந்துத்துவா கொள்கையை பாஜக எடுக்கவில்லை. பாஜகவின் பெரும்பாலான தொண்டர்கள்இந்துத்துவாவிற்காக போராட விரும்புகிறார்கள். ஆனால் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் அதை விரும்பவில்லை என்று கூறினார்.












Click it and Unblock the Notifications