எச்.ராஜா மீது பாய்ந்தது வழக்கு

Subscribe to Oneindia Tamil

காரைக்குடி:

விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது மத உணர்வைத் தூண்டும் விதமாக பேசியதாகக் கூறி பாஜக மாநில பொதுச் செயலாளர் எச்.ராஜாமீது காரைக்குடி போலீஸார் திடீரென வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தமிழகத்தில் அதி தீவிரமாக அரசுக்கு எதிர்ப்பு காட்டி வரும் முக்கியஸ்தர்களில்ராஜாவும் ஒருவர். பா.ஜ.க தனது எதிர்ப்பை அடக்கியே வாசித்து வந்தாலும் ராஜா வேகம் காட்டி வருகிறார்.

அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார். இதனால் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டார்.

இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று அரசை கன்னாபின்னா பாணியில் திட்டி வருகிறார் ராஜா.(அதிமுக அரசை 5 நிமிடம் திட்டிப் பேசிவிட்டு திமுகவையும் சோனியா காந்தியையும் அரை மணி திட்டுவார் என்பது தனிக் கதை).

இதையடுத்து ராஜாவை அடக்குமாறு கோட்டையில் இருந்து போலீசாருக்கு உத்தரவு போய்ச் சேர்ந்துள்ளது. காரைக்குடி போலீசார்தங்களது பைல்களில் நுழைந்து, தேடிக் குடைந்து ராஜாவுக்கு எதிராக ஒரு புகாரை கையில் எடுத்துவிட்டனர்.

வழக்கமாகவே மதக் கலவரத்தைத் தூண்டும் விதத்தில் தான் ராஜா பேசுவார். ஆனால், அதை வழக்காக போலீசார் பதிவு செய்ததில்லை.

இந் நிலையில் காரைக்குடியில கடந்த செப்டம்பர் 20ம் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி நடந்த விநாயகர் சிலை ஊர்வல ஊர்வலத்தில்மாற்று மதங்களை மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசி, மதக் கலவரத்தைத் தூண்ட முயன்றதாக ராஜா மீது உளவுப் பிரிவு போலீசாரைவைத்தே ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர் போலீசார்.

காரைக்குடி காவல் நிலைய உளவுப் பிரிவு போலீஸ்காரர் பெருமாள் இந்தப் புகாரைக் கொடுக்க, அதையே வழக்காகப் பதிவு செய்துள்ளனர்போலீசார்.

ராஜாவின் போக்கில் மாற்றம் இல்லாவிட்டால் ஒரு நல்ல வெள்ளிக்கிழமை ராத்திரியாகப் பார்த்து அவர் உள்ளே தள்ளப்படவும்வாய்ப்பிருப்பதாக போலீசாரிடம் பேசியபோது புரிந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+