புதிய ரேசன் அட்டைகள்: சென்னையில் நானை வினியோகம்
சென்னை:
புதிய குடும்ப அட்டைகளை வழங்கும் பணி சென்னையில் நாளையும், பிற மாவட்டங்களில் நாளை மறுநாளும் தொடங்குகிறது.
நியாயவிலைக் கடைகளில் இந்தப் புதிய அட்டைகள் வழங்கப்பட மாட்டாது. அட்டைகளை எங்கு பெறலாம் என்கிற தகவல் அந்தந்தப்பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் தெரிவிக்கப்படும்.
இதற்காக விண்ணப்பித்த 38 லட்சம் பேரில் 4.76 லட்சம் பேர் சென்னை, அதன் புறநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். எஞ்சியோர் மற்றமாவட்டங்களில் வசிப்பவர்கள்.
சென்னை, அதன் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நாளை முதல் வரும் 22ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை5.45 வரை புதிய அட்டைகள் விநியோகிக்கப்படும்.
குடும்ப அட்டையில் உள்ள புகைப்படத்தில் இடம் பெற்றுள்ள நபர் அக்னாலெட்ஜ்மெண்ட் ரசீதைக் காட்டி, குடும்ப அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளவர் வர இயலாத நிலையில், குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள 18 வயதுக்கு மேற்பட்டநபர் வந்து, அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.
குடும்ப அட்டை பெறும்போது அட்டைக்கான கட்டணம் ரூ.5-ம் மட்டும் கொடுத்தால் போதும். ஒருவருக்கு ஒரு குடும்ப அட்டை தான்வழங்கப்படும்.
குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்து, கிடைக்கப் பெறாதவர்கள் நிராகரிப்புக்கான காரணத்தை, உதவி ஆணையர் அலுவலகத்தைஅணுகித் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications