நள்ளிரவில் விசாரணைக்கு கொண்டு வரப்பட்ட அந்த 2 பேர்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள காட்டு பங்களாவிற்கு 2 பேரை நள்ளிரவில் முகத்தை மூடி போலீஸார்விசாரணைக்குக் கொண்டு வந்தனர். அவர்கள் அப்பு, ரவிசுப்ரமணியமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கை காஞ்சிபுரம் போலீஸார் தீவிரமாக நடத்தி வருகின்றனர். இந் நிலையில் நேற்றிரவு சில போலீஸ்வாகனங்கள் விசாரணை நடந்துவரும் காட்டுப் பங்களாவிற்கு வந்தன.
நள்ளிரவில் வந்த அந்த வாகனங்களிலிருந்து இரண்டு பேரை முகத்தை மூடி போலீஸார் காட்டு பங்களாவுக்குள் (வனத்துறையினருக்குச்சொந்தமானது என்பதால் காட்டு பங்களா என்று அழைக்கப்படுகிறது) கொண்டு சென்றனர்.
நாம் விசாரித்ததில் இந்த இருவரையும் சென்னை கோயம்பேடு இன்ஸ்பெக்டர் சீனிவாசன்தான் அழைத்து வந்தார் என்று தெரியவந்தது.
இந்த இருவரிடமும் எஸ்.பி. பிரேம்குமார், திருவள்ளூர் எஸ்.பி. வரதராஜுலு உள்ளிட்டோர் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர்.இந்த இருவரும் யார் என்று தெரியவில்லை.
ரகசியமாக கொண்டு வரப்பட்ட அந்த இருவரும் அப்பு மற்றும் ரவி சுப்ரமணியமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கிடையே, காட்டுப் பங்களா அமைந்துள்ள ஆட்சித் தலைவர் இல்லம் மற்றும் எஸ்.பி. ஆகியோரின் இல்லத்திற்கு செல்லும் வழியைபோலீஸார் அடைத்துள்ளனர். அந்த பகுதி வழியாக யாரும் செல்ல அனுமதிக்கவில்லை.
இதனால் காட்டுப் பங்களாவில் என்ன நடக்கிறது என்பதே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது ரகசியமாககொண்டு வரப்பட்டவர்கள் முக்கிய புள்ளிகள் என்பது மட்டும் உறுதியாகிறது.
என்னமோ நடக்குது....!!!












Click it and Unblock the Notifications