கிரீஸ்: பஸ் கடத்தல்- இந்தியர் உள்ளிட்டோர் விடுவிப்பு

Subscribe to Oneindia Tamil

ஏதென்ஸ்:

கிரீஸ் நாட்டில் பஸ்ஸைக் கடத்திய தீவிரவாதிகள் ஒரு இந்தியர் உள்ளிட்ட அனைத்துப் பயணிகளையும் இன்று அதிகாலை விடுவித்தனர்.

ஏதென்ஸ் அருகே இந்த பஸ்ஸை நேற்று இரு அல்பேனிய நாட்டுத் தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்தினர். இதையடுத்து அந்தபஸ்ஸை போலீஸ் வாகனங்கள் சுற்றி வளைத்தன.

இதையடுத்து டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட 3 பேர் பஸ்சில் இருந்து குதித்துத் தப்பிவிட்டனர்.

இதைத் தொடர்ந்து தீவிரவாதிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பயனாக முதலில் 6 பயணிகளை மட்டும் முதலில்விடுவித்தனர். பின்னர் மேலும் 19 மணி நேரம் பேச்சு நடத்தியதையடுத்து மிச்சமிருந்த 17 பயணிகளையும் விடுவித்தனர். இவர்களில் ஒருஇந்தியரும் அடங்குவார்.

இதையடுத்து இரு தீவிரவாதிகளும் போலீசாரிடம் சரணடைந்தனர். முன்னதாக தங்களிடம் இருந்து இரு துப்பாக்கிகள், கிரனைட்குண்டுகளை பஸ்சின் ஜன்னல் வழியாக தீவிரவாதிகள் வெளியில் வீசியெறித்துவிட்டு சரணடைந்தனர்.

முதலில் 1 மில்லியன் யூரோ பணம் கேட்டு மிரட்டிய தீவிரவாதிகள், அதைத் தராவிட்டால் பஸ்ஸை தகர்க்கப் போவதாக எச்சரித்தனர்.டிரைவரும் உடனே பஸ்சுக்குத் திரும்ப வேண்டும் என்று அவர்கள் கோரினர். இந்தக் கோரிக்கைகளை ஏற்க கிரீஸ் அரசு மறுத்துவிட்டது.

இதைத் தொடர்ந்து அவர்கள் சரணடைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+