ஜெயேந்திரர் ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட் நாளை விசாரணை
டெல்லி:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கிலும் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜெயேந்திர் இன்று மனுத் தாக்கல் செய்தார்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளைநடைபெறவிருக்கிறது.
இந் நிலையில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் ஜாமீன் வழங்கக் கோரி ஜெயேந்திரர் சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில்மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதே வழக்கில் ஜாமீன் கோரி ஜெயேந்திரர் தாக்கல் செய்த மனு கடந்த 10ம் தேதி சென்னை செசன்சு நீதிமன்றத்தில் தள்ளுபடிசெய்யப்பட்டது. அதனையடுத்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதற்குப் பதிலாக நேரிடையாக உச்ச நீதிமன்றத்தில் இப்போது மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவும் நாளைவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.