கர்ப்பிணி பெண் கடத்தி கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் வங்கி ஒன்றில் கிளார்க்காக பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் கடத்திக் கொலை செய்யப்பட்டார். அவர் 50 நாள் கர்ப்பமாகஇருந்தார் என்பது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது.

கடத்தி கொலை செய்யப்பட்டவரின் பெயர் அனிதா. இவரது தந்தை அய்யப்பன். இவர் பாலக்காடு பகுதியிலிருந்து 1958-ம் ஆண்டுசென்னைக்கு வந்து குடியேறினார். சேமியர்ஸ் ரோட்டில் டீக்கடை வைத்திருந்தார். இவருக்கு அனிதா தவிர, அபிலாஷ், அஜீஸ் என்ற 2மகன்களும் உள்ளனர்.

அனிதாவின் கணவர் சேதுமாதவன் சிவில் என்ஜீனியரிங் படித்தவர். வேலை கிடைக்காததால் வடபழனி பொன்னியம்மன் கோயில்தெருவில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 7 வருடம் ஆகிறது.

அனிதா கடந்த 4 வருடமாக சென்னை சென்ட்ரல் ரெயில்வே அலுவலகத்தில் உள்ள அர்பன் வங்கியில் கிளார்க் வேலை பார்த்து வந்தார்.அனிதாவின் பெற்றோர் வீடு நந்தனம் விரிவாக்கம் 6-வது தெருவில் உள்ளது. பிரசவத்துக்கு தாய் வீட்டுக்கு வந்த அனிதா குழந்தை பிறந்தபிறகு கணவர் வீட்டுக்கு செல்லவில்லை.

அனிதா வடபழனியில் வசித்தபோது பக்கத்து வீட்டில் குடியிருந்த அஸ்வின் என்ற வாலிபருடன் காதல் ஏற்பட்டது. இவர் ஒரு தனியார்வங்கியில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை பார்த்தார்.

அனிதாவுக்கும், அஸ்வினுக்கும் தொடர்பு ஏற்பட்டதும் அதை கணவர் கண்டித்தார். மேலும் திருமணமாகி 6 வருடம் கழித்து அனிதாவுக்குகுழந்தை பிறந்தது. இதில் சேதுமாதவனுக்கு சந்தேகம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதனால் குழந்தை பெற்ற பிறகும் அனிதா தாய் வீட்டில்தான் இருந்தார். அஸ்வின் அடிக்கடி அனிதாவிடம் போன் செய்து பேசியிருக்கிறார்.வேலை பார்க்கும் வங்கிக்கும் சென்று பேசியிருக்கிறார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இந் நிலையில் கடந்த 14ம் தேதி அனிதா தாய் வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டபோது அஸ்வினால் கடத்தப்பட்டார். இது தொடர்பாககணவர் சேதுமாதவன் சைதாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். இந் நிலையில் கேளம்பாக்கம் அருகில் கோவளம் கடற்கரையைஅடுத்துள்ள தைலமர தோப்பில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தாள்.

போலீஸ் விசாரணையில் அது அனிதா என தெரிய வந்தது. பிரேத பரிசோதனையில் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டு இருப்பதும்,முகத்திலும் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. மேலும் 50 நாள் கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்தது.கற்பழிப்பு இல்லை.

அனிதாவின் கழுத்தில் இருந்த 6 பவுன் தாலி செயின், 3 பவுன் செயின் மற்றும் செல்போனைக் காணவில்லை. தங்க வளையல்கள், கொலுசு,கடிகாரம் ஆகியவை அப்படியே இருந்தன.

தற்போது அஸ்வினை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அஸ்வினுக்கு சொந்த ஊர் உடுமலைப்பேட்டை. இவர் கடத்தலுக்குபயன்படுத்திய காரின் எண்ணை ஆட்டோ டிரைவர்கள் குறித்து வைத்துள்ளனர். போலீசார் கார் நம்பரை வைத்து விசாரித்த போது அதுமோட்டார் சைக்கிளுக்குரிய எண் என்பது தெரியவந்தது.

அஸ்வின் செல்போன் மூலம் கடந்த 2 நாட்களாக பலரிடம் பேசி உள்ளான். அந்த நம்பர்களை செல்போன் நிறுவனத்திடம் இருந்துபோலீஸார் வாங்கி விசாரித்து வருகிறார்கள். விரைவில் அஸ்வின் பிடிபடுவான் என்று போலீஸார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+