For Daily Alerts
Just In
எம்ஜிஆர் நினைவிடத்தில் 24ம் தேதி ஜெ. அஞ்சலி
சென்னை:
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 17வது நினைவு நாளையொட்டி வருகிற 24ம் தேதி அவரது நினைவிடத்தில் முதல்வர் ஜெயலலிதா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.
இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழக அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அதிமுக தொண்டர்களையெல்லாம்ஆற்றொணா துயரத்தில் ஆழ்த்தி விட்டு மறைந்த எம்ஜிஆர் அவர்களின் 17வது ஆண்டு நினைவு நாள் வருகிற 24ம் தேதிஅனுசரிக்கப்படுகிறது.
அன்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்துஅஞ்சலி செலுத்துகிறார். அதன் பின்னர் நினைவிட வளாகத்தில், உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும்.
அதில் கழகத்தைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Saturday, December 18, 2004, 5:30 [IST]